சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – சுரேஷ் ரெய்னா குறித்து ரவி சாஸ்திரி கருத்து!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - சுரேஷ் ரெய்னா குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு - சுரேஷ் ரெய்னா குறித்து ரவி சாஸ்திரி கருத்து!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – சுரேஷ் ரெய்னா குறித்து ரவி சாஸ்திரி கருத்து!

நடப்பு IPL சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா போன்ற ஒரு வீரரை நிர்வாகம் மீண்டும் தேட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா

கடந்த சில சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு வந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பு சீசனில் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார். இதற்கிடையில் சுரேஷ் ரெய்னா இல்லாமல் இந்த சீசனில் விளையாடிய சென்னை அணியின் நிலைமை சற்று மோசமானதாக இருந்தது. அந்த வகையில் நடப்பு சீசனில் சென்னை அணி சுமார் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இப்போது, சென்னை அணி சுரேஷ் ரெய்னாவை மீண்டும் கொண்டு வர வேண்டும் அல்லது அவரைப் போன்ற ஒரு வீரரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

மே 28 வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு திடீர் அறிவிப்பு! தீவிரமெடுக்கும் கொரோனா பரவல்!

கடந்த பல ஆண்டுகளாக CSK அணியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ரெய்னாவும் ஒருவராக இருந்தார். மேலும், MS தோனி தலைமையிலான அணிக்கு ஒரு முக்கிய பங்களிப்பை கொடுத்திருந்தார். ஆனால், ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக இடது கை பேட்டர் சுரேஷ் ரெய்னாவை சென்னை அணியின் நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இப்போது சுரேஷ் ரெய்னாவின் வருகை குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ‘சிஎஸ்கே அணி பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால் சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாங்கள் அடிக்கடி மறந்து விடுகிறோம். ஐபிஎல் போட்டிகளில் ஜொலித்த வீரராக அவர் இருந்தார். அவர் 3வது இடத்தில் பேட்டிங் செய்யும் போது நிலையான ரன்களை அடிப்பதன் மூலம் அணிக்கு தேவையான ஸ்திரத்தன்மையை வழங்குவார். மேலும் அவர் மற்ற பேட்டர்களுக்கு விஷயங்களை எளிதாக்கினார். அத்தகைய வீரரை சென்னை அணி கண்டுபிடிக்க வேண்டும். ராயுடுவும், உத்தப்பாவும் இன்னும் அணிக்காக விளையாடினாலும், அவர்களுக்கு கொஞ்சம் குஷன் கிடைத்தால் அது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!