தமிழகத்தில் ரேஷன் கடைகள் 2 நாட்கள் மூடல் – மாவட்ட நிர்வாகம் தகவல்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகளை கொடுக்கும் பணி இருப்பதால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 24, ஆகஸ்ட் 14 ல் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு:
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் தொகை மற்றும் இலவச மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகள் ரேஷன் கடைகள் மூலம் கொடுக்கப்பட்டது. அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் ஓய்வில்லாமல் பணியை மேற்கொண்டு வந்ததால், வழக்கமான விடுமுறை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.
தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் – அரசாணை வெளியீடு!
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் தற்போது தஞ்சாவூர் மாவட்ட நியாய விலை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியுடன் இலவச மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் கொடுக்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு மே 16, ஜூன் 4, 11 உள்ளிட்ட தேதிகளில் விடுமுறை அளிக்கப்படாத காரணத்தால், ஜூலை 17 மற்றும் ஆகஸ்ட் 14 உள்ளிட்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 17, ஆகஸ்ட் 14 உள்ளிட்ட தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.