தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’ – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கபடமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் அனைவருக்கும் அரசு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றிலிருந்து காக்கிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.
வங்கி பொது தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
இந்த நிலையில் போலியான தகவல்களால் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு மாவட்டம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நிலையிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.
தமிழகத்தில் 3 பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று!
தற்போது கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதனால் மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள வைக்கும் நோக்கில் கிருஷ்ணகிரியில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.