தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – அமைச்சர் உத்தரவு!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் - அமைச்சர் உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவ.1 முதல் இரவு 7 மணிவரை செயல்படும் – அமைச்சர் உத்தரவு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.1 ம் தேதி முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகள்:

நாடு முழுவதும் வரும் நவ.4 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு வசதிகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தீபாவளி முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை மற்றும் மண்ணெண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் குடும்ப அட்டைகள் மூலமாகவே அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் பல்வேறு குடும்பங்கள் குடும்ப அட்டை இல்லாமல் இருந்து வந்தன.

அக்.27ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை சரிசெய்யும் விதமாக புதிதாக குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 7 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் மக்களுக்கு தடையில்லா அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் விதமாக நவ.1 ம் தேதி முதல் 3 ம் தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் கவனத்திற்கு – மோசடியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள்!

அப்போது எடையாளர்கள் பற்றாக்குறை இருந்தால் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட தன்னார்வலர்களை நியமித்து பணிகளை தொடர்ந்து கொள்ளலாம்.அதன்படி நவ.1 முதல் 3 நாட்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் வழங்க திறந்து வைத்திருக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பொருட்கள் வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு நவ.3 தேதி வரை பொருட்கள் வாங்காதவர்கள் நவ.8ம் தேதிக்கு மேல் பொருட்கள் வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!