தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான் ரேஷன் பொருட்கள்? பரவும் வதந்தி!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் தான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக ஊடக வதந்தி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைக்கு தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஒரு பேராயுதமாக உள்ளது. சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டாமல் தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட மறுக்கின்றனர். அரசு தடுபூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. சுகாதார பணியாளர்கள் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் மரணம் – தலைவர்கள் இரங்கல்!
இதன் மூலம் இந்திய சாதனையாக நேற்று ஒரே நாளில் 28 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மக்கள் வெளியில் செல்லும் போது சில இடங்களில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வெளி மாநிலங்களுக்கு, வேறு நாடுகளுக்கு செல்ல விமான நிலையத்தில் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக்கொண்ட சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற வதந்தி பரவி வருகிறது.
Infosys நிறுவனத்தில் ஆப்கேம்பஸ் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் – முழு விவரம் இதோ!
அறிவிப்பு 13.09.21 திங்கட்கிழமை முதல் ரேஷன் பொருட்கள் பெற நியாய விலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக ஒரு பதிவி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது இப்படி எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் தெரிவித்தார். இது வெறும் வதந்திதான். பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.