அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கார்டு ரத்து!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கார்டு ரத்து!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கார்டு ரத்து!

அந்தஸ்தில் முன்னிலையில் இருப்பவர்களும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வீணாக்கி கொண்டிருப்பதால் கீழ் குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பல ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான அன்றாட தேவை பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். தனி நபர்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. அதாவது தனி நபருக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, எண்ணெய், மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 19.71 லட்சம் தனி நபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன் பெரும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி எந்த மாநிலத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் சமமாக ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என அவ்வப்போது ரேஷன் கார்டு விஷயத்தில் பல புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. அதாவது அந்தஸ்தில் முன்னிலையில் இருப்பவர்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் கள்ள சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல நாட்களாக ரேஷன் பொருட்களை வாங்குவதும் இல்லை.

Exams Daily Mobile App Download

இதனால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தனக்கு சொந்தமாக 100 சதுர மீட்டர் பரப்பளவில் ஃபிளாட் அல்லது வீடு, நான்கு சக்கர வாகனம்/டிராக்டர், ஆயுத உரிமம், குடும்ப வருமானம் கிராமத்தில் இரண்டு லட்சத்துக்கும், நகரத்தில் ஆண்டுக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாக வைத்திருந்தால் அவர்களின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் பெற தகுதி இல்லாதவர்கள் அவர்களது ரேஷன் கார்டுகளை தாலுகா மற்றும் டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!