ரேஷன் கார்டில் புதிய நபரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
மத்திய அரசு வழங்கி இருக்கும் முக்கிய அடையாள அட்டை ஆவணமான ரேஷன் கார்டில், புதிய குடும்ப உறுப்பினர்களை இணைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முழுமையான செயல்முறையை பின்பற்றும் படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ரேஷன் கார்டு
நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான மக்களும் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள அரசு, ரேஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ரேஷன் அட்டைகள் அடையாள ஆவணமாகவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர வங்கியில் கணக்கு திறக்கும் போதும், அரசின் திட்டங்களை பெற்றுக்கொள்வதற்கும் இவ்வகை ரேஷன் கார்டுகள் தேவைப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு ரேஷன் அட்டையிலும் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்ற சூழ்நிலையில், திருமணத்திற்குப் பிறகு ஒரு புதிய குடும்பம் உருவாக்கப்படும் போது அப்புதியவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டியது கட்டாயமாகும். ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்க்க அலுவலகங்களுக்கு செல்லலாம். அல்லது ஆன்லைன் மூலம் ஒருவர் இருக்கும் இடங்களில் இருந்தபடியேயும் மேற்கொள்ள முடியும். இப்போது ரேஷன் அட்டைகளில் புதிய நபரை சேர்க்க விரும்பும் நபர்கள் கீழ்காணும் எளிய வழிமுறைகளை பின்பற்றும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த செயல்முறைக்கு சில ஆவணங்கள் தேவைப்படுகிறது. அந்த வகையில் முதலாவதாக குடும்பத் தலைவரிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். தொடர்ந்து குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், அவர்களது பெற்றோரின் ஆதார் அட்டைகள் ஆகியவை தேவைப்படும். இதுவே புதிதாக திருமணமான பெண்ணின் பெயரை ரேஷன் அட்டையில் சேர்க்க விரும்பினால், அவரது ஆதார் அட்டை, திருமண சான்றிதழ் மற்றும் அவரது பெற்றோரின் ரேஷன் கார்டு ஆகியவை கட்டாயமாகும்.
ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க:
- முதலில் உங்கள் மாநிலத்தின் உணவு விநியோகத்திற்கான அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- இப்போது நீங்கள் ஒரு உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும்.
- உங்களிடம் ஏற்கனவே ஒரு ஐடி இருந்தால், அதன் மூலம் உள்நுழையவும்.
- புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கான விருப்பம் முகப்புப் பக்கத்தில் தோன்றும்.
M.Phil, Ph.D பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – ப்ராஜெக்ட் சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு!
- அதைக் கிளிக் செய்த பிறகு, ஒரு புதிய படிவம் உங்கள் முன் திறக்கும்.
- இங்கு உங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரின் முழுத் தகவலையும் சரியாக நிரப்ப வேண்டும்.
- படிவத்துடன், தேவையான ஆவணங்களின் நகலையும் பதிவேற்ற வேண்டும்.
- படிவத்தை சமர்ப்பித்த பிறகு பதிவு எண் வழங்கப்படும்.
- இதன் மூலம் உங்கள் படிவத்தை இந்த போர்ட்டலில் கண்காணிக்கலாம்.
- பிறகு அதிகாரிகள் உங்களின் படிவம் மற்றும் ஆவணத்தை சரிபார்ப்பார்கள்.
- எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
- பிறகு புதிய ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கு தபால் மூலம் வழங்கப்படும்.