ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு இனி கவலை வேண்டாம் – புதிய அப்டேட்! மத்திய அரசு ஏற்பாடு!
பொதுமக்களுக்கு இனி ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவலை இல்லை. அடையாள அட்டைக்கான அனைத்து குழப்பங்கள் மற்றும் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும் புதிய அப்டேட் ஒன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு அப்டேட் :
ரேஷன் கார்டு மூலமாக அரசின் பல உதவிகளையும், மிகக் குறைந்த விலைக்கு ரேஷன் பொருட்களையும் வாங்கி பலரும் பயன் பெறுகின்றனர். குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இந்த ரேஷன் கார்டு மூலம் அரசு அளித்த உதவி திட்டங்கள் கொரோனா காலகட்டத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஆனால் நிறைய பேருக்கு ரேஷன் கார்டில் பல பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் அடையாள அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் திணறுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதாவது, குடும்ப உறுப்பினர் பெயர் சேர்ப்பு, நீக்கம், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது, யாரை கேட்பது என பலர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு மத்திய அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்கள் அமைப்பும் (சுவிதா) உணவு மற்றும் பொது விநியோகத் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டம் வாயிலாக சுமார் 23.64 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு? தலைமை செயலாளர் விளக்கம்
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டில் உள்ள பிரச்சனைகளுக்கு பொதுச் சேவை மையங்களில் எளிதாகத் தீர்வு காண முடியும். மேலும், ஆதார் இணைப்பையும் இங்கே மேற்கொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டுக்கு டூப்ளிகேட் பெறுவது போன்ற பல்வேறு வகையான சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெறமுடியும். என்னென்ன ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்பது போன்ற விவரங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.