தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் தரமற்ற பொங்கல் பரிசு வழங்கியதாக தமிழக அமைச்சர்கள் மீது திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் புகார் அளித்து உள்ளார். மேலும் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழ் நாடு அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் அது போன்ற இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இதுமட்டுமில்லாமல் சென்ற ஆண்டு தமிழகத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் பல திட்டங்களை கூறி இருந்தது. இதில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம். மேலும் இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்து அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் – இவருக்கு பதில் இனி இவரே!
தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வெல்லம், பச்சரிசி, புளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ‛பொங்கல் பரிசு தொகுப்பு’ வழங்கியது. இதில், சில இடங்களில் பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.
இதனிடையே தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கியது தொடர்பாக திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.