ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் 15 வரை கால அவகாசம் – eKYC செயல்முறை குறித்த முக்கிய அறிவிப்பு!
eKYC செயல்முறையை செய்து முடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு eKYC செயல்முறையை செய்து முடிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
eKYC செயல்முறை:
அரசின் அனைத்து நல திட்டங்களையும் பெறுவதற்கு eKYC செயல்முறையை முடிப்பது மிகவும் அவசியமாகும். இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுக்காக பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் என்கிற திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இணையும் விவசாயிகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெறுவதற்கு விவசாயிகள் கண்டிப்பாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த eKYC செயல்முறையை முடிக்காவிடில் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.
Exams Daily Mobile App Download
இந்த உதவி தொகை எந்த பிரச்சனையும் இன்றி வாங்க ஒவ்வொரு PM-KISAN பயனாளிகளும் உடனே PM கிசான் இணையதளத்தில் eKYC செயல்முறையை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அவ்வப்போது இந்த செயல்முறையை முடிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் மாநில உணவு, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை, மாநிலத்தின் அனைத்து நுகர்வோர்களும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள ரேஷன் கடைக்கு சென்று eKYC செயல்முறையை செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
eKYC செயல்முறையை முடித்திருந்தால் ரேஷன் கடை நடத்துபவருக்கு ஒரு நுழைவுக்கு 4 ரூபாய் அரசாங்கத்தால் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. eKYC செயல்முறையை முடிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஊராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. eKYC செயல்முறை தோல்வியடைந்துவிட்டால் உணவு மற்றும் வழங்கல் ஆய்வாளரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.