ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. இனி கவலை இல்லை – நாளை முதல் அனைத்து கடைகளிலும் பொருட்கள்!
தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கும் பணி தற்போது முடிவடைந்து உள்ளதால் பொதுமக்கள் எந்த ரேஷன் கடையிலும் நாளை (01.02.2023) முதல் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன்:
ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த கார்டுகள் மூலமாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மலிவான விலையில் ரேஷன் பொருட்களை பெறுகின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் பல சலுகைகளை குடிமக்கள் பெற முடியும். சமீபத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில், 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்க பணமும், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.
இல்லத்தரசிகளுக்கு வரவுள்ள குட் நியூஸ்.. அதிகரிக்கப்படும் மானியம்? இலவச சிலிண்டர் – பட்ஜெட் 2023!!
Follow our Instagram for more Latest Updates
இந்த பொங்கல் பரிசு கார்டு தாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வழங்கப்பட்டன. தற்போது பொங்கல் பரிசு வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் முழுவதுமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை முதல், அதாவது பிப்ரவரி 1ம் தேதி முதல் அடுத்த மாத உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதை நுகர்வோர் பழையபடி தங்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடை மட்டுமின்றி எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.