ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் – ஜனவரி 31 முதல் பார்வைக்கு அனுமதி!!
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் தோட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டம் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.
பெயர் மாற்றம்
தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். மேலும்,இந்த தோட்டத்தில் பல வகையான பூக்கள், செடிகள் என நூற்றுக்கணக்கான தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த தோட்டத்திற்கு ‘முகல் தோட்டம்’ என்ற பெயரிடப்பட்டிருந்தது.
முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பம் பிப்ரவரி 1 முதல் துவக்கம் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள ‘முகல் தோட்டம்’ அம்ரித் உதயன் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுட்டுள்ளது. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தை ஒட்டி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ‘அம்ரித் உதயன்’ ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என குடியரசு தலைவரின் துணை செய்தி தொடர்பாளர் நவிகா குப்தா தெரிவித்துள்ளார்.