பொறியியலுக்கான தரவரிசை பட்டியல் செப். 4 ஆம் தேதி வெளியீடு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தரவரிசை பட்டியல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கடந்த ஜூலை 26ல் அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் பொறியியல் முதலாம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன் விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் இம்மாதம் ஆகஸ்ட் 24 ல் முடிந்தது. இந்த நிலையில், கடந்த 27ம் தேதியுடன் விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் நிறைவடைந்தது.
நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – DGCA உத்தரவு!
இதனை அடுத்து, ஏற்கனவே ஆன்லைனில் கட்டணம் செலுத்தியவர்கள் தங்களது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து வருகின்றனர். இதுவரை பதிவேற்றம் ஆகியுள்ள சான்றிதழ்களை அரசு இன்ஜினியரிங் சேர்க்கை குழு சரிபார்த்து வருகிறது. இந்த பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும், விளையாட்டு துறை சார்பாக இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்து உள்ளோருக்கான கலந்தாய்வு ஏற்கவனே நேரடியாக நடந்து முடிந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில், கலந்து கொள்ள முடியாதோர் நாளையும் அதற்கு அடுத்த நாளான புதன் கிழமையும் நேரடியாக, தரமணி மத்திய பாலிடெக்னிக் கவுன்சிலிங் உதவி மையத்துக்கு சென்றால், அங்கு சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு மாணவர்களின் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 4ம் தேதி வெளியிடப்படும் என்றும், அதன் பிறகு மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.