புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி – மே 7ம் தேதி பதவியேற்பு!!
புதுச்சேரியில் நேற்று சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி வரும் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
புதுச்சேரி பதவியேற்பு:
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. 30 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
இளங்கலை, முதுகலை இறுதியாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு – பல்கலை நிர்வாகம் அறிவிப்பு!!!
இந்நிலையில் புதுச்சேரியில் எந்த கட்சி ஆட்சியமைக்கும் என பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, பாஜக தலைவர் நிர்மல் குமார் மற்றும் பிற தலைவர்களுடன் நடைபெற்ற 1 மணி நேர பேச்சு வார்த்தையில், ரங்கசாமிக்கு முதல்வர் பதவி அளிப்பது உறுதி செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தவிர புதுச்சேரி சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர்கள் பதவி ஒதுக்குவது குறித்தும் தீர்மானம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் வாரிய தலைவர், நியமன எம்எல்ஏக்கள் பதவிகளை என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக சரிசமமாக பிரித்து கொள்வது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வராக ரங்கசாமி வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார்.