IPL க்கு முன், IPL க்கு பின் – இரு கட்டமாக நடத்தப்படும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்!
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் IPL தொடர் தொடங்கவுள்ளதால் இம்முறை இந்தியன் பிரீமியர் லீக் 2022க்கு முன்னும் பின்னும் ரஞ்சி டிராபி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று BCCI தெரிவித்துள்ளது.
BCCI அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் புது உருவமான ஓமைக்ரான் தொற்று பாதிப்பால் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் அனைத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தடை விதித்தது. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரை ஒட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் BCCI அறிவிப்பின் படி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – கொரோனா சிகிச்சை!
தற்போது இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் பெரிதும் நடைபெறவில்லை. நடைபெற்று கொண்டிருக்கும் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இன்று 2022 ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான குரூப் எலைட் போட்டிகள் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை BCCI தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இப்போட்டிகள் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது.
பிப். 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்நிலையில் 2022 ஆண்டுக்கான 15 வது IPL சீசன் தொடர் வருகிற மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போட்டிகளோடு ரஞ்சி குரூப் போட்டிகள் நடத்தப்பட்டால் அதில் சிக்கல் ஏற்படும் காரணத்தினாலும் ரஞ்சி மற்றும் IPL தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஒரே சமயத்தில் இரண்டு போட்டிகளிலும் விளையாட முடியாதா சூழல் ஏற்படும் காரணமாகவும் BCCI ரஞ்சி கோப்பை தொடரை இந்தியன் பிரீமியர் லீக் 2022க்கு முன்னும் பின்னும் ரஞ்சி டிராபி இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.