தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் திருநாள் – தலைமை காஜி அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் நேற்று மாலை பிறை தென்படாத காரணத்தால் ரமலான் திருநாள் மே 14ம் தேதியான வெள்ளிக்கிமை அன்று கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
ரமலான் திருநாள்:
பிறை பார்த்து கொண்டாடப்படும் ரமலான் பெருநாளின் பிறை தமிழகம் முழுவதும் நேற்று தென்படவில்லை. ரமலான் பிறையை நம்பிக்கைக்கு உரிய ஒருவர் பார்த்து அதை அவர் தலைமை காஜியிடம் சொல்ல வேண்டும். பின்னர் தலைமை காஜி மக்களுக்கு ரமலான் என்று என்பதை அறிவிப்பார். அந்த வகையில் நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எங்கும் ஷவ்வால் மாத பிறை காணப்படவில்லை.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை – அரசு திட்டம்!!
ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரமலான் திருநாளாக கொண்டாடப்படும். இதனால் தமிழக தலைமை காஜி அவர்கள், மே 13ம் தேதியான இன்று ரமலான் மாதத்தின் 30ம் நாள் என்றும் மே 14ம் தேதி தமிழகம் முழுவதும் ரமலான் திருநாள் (ஈத் திருநாள்) கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆதலால் மக்கள் தொற்று காலத்தில் கொண்டாட்டங்களை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தினால் அனைவருக்கும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.