அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை கொண்டாட போகும் ஆலியா – வைரலாகும் வீடியோ!
ஆலியாவிற்கு தற்போது தான் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் கொண்டாட இருக்கின்றனர். இந்த ரம்ஜானை சிறப்பாக்க ஆலியா பயங்கரமாக பிளான் போடும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.
ஆலியா & சஞ்சீவ்:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமானவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இந்த தொடரில் நடித்து கொண்டிருந்த போதே இருவரும் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். இவர்களுக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தையும் இருக்கிறது. ஐலா பிறந்த பிறகு ஆலியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஒப்பந்தமானார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜீ தமிழில் கமிட்டான செழியன்!
ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு மீண்டும் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமானார். கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் ஆலியா மானசா சீரியலை விட்டு விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் கூட தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்து வந்தார். பின்பு பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே சீரியலில் இருந்து விலகினார். ஐலா பாப்பாவின் பிறந்தநாளான மார்ச் 20 அன்று தான் ஆலியாவிற்கு வளைகாப்பை நடத்தினர்.தற்போது ஆலியாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Exams Daily Mobile App Download
குழந்தையுடன் இருக்கும் அழகிய தருணங்களை அவ்வப்போது சமூக வலை பக்கங்களில் பதிவிட்டபடி இருக்கிறார். அர்ஷ் பிறந்த பிறகு முதல் ரம்ஜானை ஆலியா மற்றும் சஞ்சீவ் கொண்டாட இருக்கின்றனர். இந்த ரம்ஜானை சிறப்பாக்க குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் புதுத்துணி எடுத்து கொடுத்திருக்கிறார் மற்றும் அர்ஷ்க்காக தாய்ப்பாலில் ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது