தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்காது – ‘இந்த’ மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்காளநாத சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், திருவிழாவின் முக்கிய நாளான ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகம் முழுவதும் அல்லாமல் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகளுக்கு என்று தனியாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருஉத்திரகோசமங்கையில் உள்ள ஸ்ரீ மங்காளநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
தமிழகத்தில் ஜன.7 இத்தனை பகுதிகளில் மின்தடையா? – உங்கள் ஏரியாவும் இந்த லிஸ்டில் இருக்கா!!
இக்கோயிலில் உள்ள மூலவர் பச்சை மரகத சிலையால் செய்யப்பட்டது. இதனால் வருடம் முழுவதும் சிலைக்கு சந்தனம் பூசப்பட்டு வழிபாடுகள் செய்யப்படும். இவ்விழாவின் போது தான் பழைய சந்தன காப்பு களையப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படும். ஜனவரி 5ம் தேதியான இன்று சந்தனம் களைதலும், நாளை அதாவது ஜனவரி 6ம் தேதி சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள்.
இதனால் மாவட்ட ஆட்சியர், அதிக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாளை ( ஜனவரி 6ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates