ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
தமிழகத்தில் பாம்பன் பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில் சேவைகள் தொடர்ந்து செயல்பட்டன. முன்பதிவு வசதி கொண்ட விரைவு ரயில்கள் மட்டும் வழக்கம் போல இயக்கப்பட்டன. மேலும் ரயில்களில் பயணம் செய்யும் போது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சுழற்சி முறையில் விடுமுறை – கோவை கமிஷனர் தகவல்!
இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது நீளமான கடல் பலமான பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. சுமார் 2.3 கி.மீ நீளம் கொண்ட இந்த பாலம் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டதாகும். தற்போது இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட இருந்த திருப்பதி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் எனவும், சென்னை சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து இரவு 8:52க்கு புறப்படும் எனவும், மாலை 5:45க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும், இரவு 7:15க்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத் மாநிலம் ஓக்ஹாவிலிருந்து 29ம் தேதி புறப்பட்ட ரயிலும் மண்டபத்துடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.