ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் கோவிலில் வெளி மாநிலங்களில் வரும் பக்தர்களுக்கு இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இ-பாஸ் கட்டாயம்:
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளில் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. முதற்கட்டமாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் அவரச தேவைகளுக்காக பயணம் செய்ய இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கொரோனா கட்டுக்குள் கொண்டுவந்தவுடன் படிப்படியாக போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டு இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக வெளி மாநிலங்களில் இருந்து பயணம் செய்பவர்களுக்கு இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை – நிதி ஆயோக் உறுப்பினர் கண்டனம்!!
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் அங்கு கொரோனா தாக்கம் பரவும் அபாயம் உள்ளதால் சுகாதாரத்துறை சார்பில் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பி.எட் படித்த முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் – விண்ணப்பபதிவு காலதாமதம்!!!
ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள கமுதி, பரமக்குடி, ராமநாதபுரம் நகர் பகுதிகளில் 42 வயது முதல் 62 வயதிற்குட்பட்ட 10 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாகவே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் பொறிக்கொடி கூறுகையில்,” தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாவட்டங்களில் முககவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் கூடும் இடத்தில் மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.