திடீரென மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியில் கோபி! அதிரடி திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

0
திடீரென மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா - நிம்மதியில் கோபி! அதிரடி திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!
திடீரென மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா - நிம்மதியில் கோபி! அதிரடி திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!
திடீரென மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா – நிம்மதியில் கோபி! அதிரடி திருப்பத்துடன் பாக்கியலட்சுமி!

கோபியும் ராதிகாவும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற விஷயம் தாத்தாவிற்கு மட்டுமே தெரியும். எப்போது தாத்தா உண்மையை வெளியே கூறுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ராமமூர்த்தி தாத்தா இறந்து விடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போது தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தனது கண்ணுக்கு முன்னாடி கோபி தவறு செய்தாலும் கூட கோபியை பாக்கியா மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறார். பாக்கியாவின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி ராதிகாவை திருமணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோபி செய்து கொண்டிருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே ராதிகாவைத் தான் கோபி திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்கிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். ஆனால், கோபியை ராமமூர்த்தி தண்டித்த போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிடுவேன் என ராமமூர்த்தியை கோபி மிரட்டியதால் பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து ராமமூர்த்தி அமைதியாக இருந்துவிடுகிறார். பின்பு, கோபி திருந்துவார் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், இதையும் கோபி தனக்கு சாதகமாக பயன்படுத்தி ராதிகாவுடன் மிகவும் நெருக்கமாகி கொண்டே செல்வதால் இதற்கு ஒரு முடிவு கட்டியே தீரவேண்டும் என நினைத்து பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டிற்கு புறப்படுகிறார்.

ராதிகாவுக்காக மீண்டும் பாக்கியாவின் தொழிலை தொடங்க ஒப்புக்கொள்ளும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

ஆனால், ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பாகவே அந்த வீட்டை காலி செய்து ராதிகா வேறு வீட்டிற்கு சென்று விடுகிறார். எப்படியாவது பாக்கியா தான் கோபியின் கணவர் என்பதை ராதிகாவிடம் சொல்லியே தீரவேண்டும் என தாத்தா காத்துக்கொண்டிருக்கிறார். தற்போது கூட ஒரு நாள் முழுக்க பாக்கியா காவல் நிலையத்தில் இருந்த போதும் கோபி பாக்கியாவை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. இதனால் கோபி மீது குடும்பமே கோபத்தில் உள்ளனர். ஆனால், தாத்தாவிற்கு மட்டும் தான் கோபி கண்டிப்பாக ராதிகாவுடன் தான் இருந்திருக்கிறார் என்பது தெரியும். ஆனாலும் பாக்கியாவிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருந்து வருகிறார். கோபியை பற்றிய உண்மையை ராதிகாவிடம் தாத்தா எப்போது சொல்ல போகிறார் என எதிர்பார்த்த சமயத்தில் தாத்தா இறந்துவிடுவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!