அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை – ராமதாஸ் கோரிக்கை!!
கொரோனா ஊரடங்கு காரணமாக அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆன்லைன் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த அரசு உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழத்தின் மாணவர்களுக்கு பலத்த கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் தேர்வுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 30% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!!
ராமதாஸ் அறிக்கை:
மிகவும் குறைவான அளவில் பொறியியல் மாணவர்களின் தேர்ச்சி உள்ளதால், அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் தேர்வில் முறைகேடு செய்ததாக கூறி 30% மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற செயலாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நேரடி வகுப்புகள் நடத்தவில்லை.
மறுபரிசீலனை:
ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைவு. தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் காரணாமாக பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அண்ணா பல்கலை நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தியுள்ளதால் பல மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்துள்ளது. ஒரு ஆண்டு மட்டும் தேர்வுகளை நெளிவு, சுளிவுகளுடன் நடத்துவதால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. எனவே அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்