விஜய் டிவி சீரியலில் இருந்து நான் விலகவில்லை – ரச்சிதாவின் குழப்பமான விளக்கம்!
விஜய் டிவி சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் நிலையில், அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக வெளியான தகவலுக்கு குழப்பமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ரச்சிதா:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடிப்பதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு ஒளிபரப்பாகிய ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ – அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பிக்கும் செண்பகம்!
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இதன் ஆரம்பகால கதைக்களம் வேறு ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் செந்தில் பாலாஜி இருவேடங்களில் தோன்றினார். பின்னர் கொரோனா காரணமாக இந்த சீரியல் முதல் பாகம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் தான் இவரை நடிக்க அழைத்தனர். இவர் வந்த பின்னால் சரவணனும் மீனாட்சியும் இணைந்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் இந்த சீரியலில் சில எபிசோடுகளில் அவர் இல்லாததால் அவர் இந்த சீரியலை விட்டு விலகி விட்டாரா என கேள்விகள் எழுந்தது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது அவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகவில்லை என்பதை கூறும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதே தூண்… அதே மாடி… அதே கதவு… அதே வீடு… ஆஹா மறுபடியுமா, எங்கேயும் போகல, இங்கேயே தான் இருக்கு என பதிவிட்டவர், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியில் நான் விலகிவிட்டதாக சில வதந்திகள் வெளி வந்துள்ளன.
தற்கொலைக்கு முயற்சிக்கும் வெண்பா, காப்பாற்றும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால் நான் விலகவில்லை, போற வரைக்கும் போவோம்… தானா நின்னா பாத்துக்கலாம், அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, இத பெரிய செய்தியாக்காதீங்க, ஒரு பலனும் இல்ல, போறாங்க, போறாங்கனு சொல்லி நீங்களே போக வச்சிடுவிங்க போல என குறிப்பிட்டுள்ளார். மேலும் நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல, பார்ப்போம் என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம், சப்போர்ட் பண்ண நீங்கதான் இருக்கீங்களே, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், என்றும் பதிவிட்டுள்ளார்.