தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் – ஆணையம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் - ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் - ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் – ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி இடங்களில், ஒரு இடத்தை நிரப்ப செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு:

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த மற்றொரு எம்.பி ஆன முகமது ஜான் காலமானார். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இடங்களில் காலியாக உள்ளது.

LPG சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு திரும்ப பெறுதல் – பாமக நிறுவனர் வலியுறுத்தல்!

இந்த பணியிடங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக தேர்தல் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காரணத்தால் தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் ராஜ்யசபா தேர்தலை உடனடியாக தனித்தனியாக நடத்த வேண்டும் என்று திமுக மக்களவை குழு தலைவர் டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வில்சன், ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தி இருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், அதன் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு மட்டும் ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் இறந்ததை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!