அரசு மருத்துவமனையில் ரூ.19500/- ஊதியத்தில் 10 வது படித்தவருக்கு வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இந்த அறிவிப்பின்படி, Telephone Operator பணிக்கு என்று காலிப்பணியிடம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 07.04.2022 ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Rajiv Gandhi Hospital வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் Telephone Operator பணிக்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள அறிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தொலைபேசி இயக்குபவர் பயிற்சி படித்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது மாதம் ரூ.19500/- வரை ஊதிய தொகை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
Rajiv Gandhi Hospital விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, சரியாக பூர்த்தி செய்து 07.04.2022 ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க அறிவுறுத்த பட்டுள்ளார்கள், தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்கவும்.