கோபி & ராதிகா திருமணம் பற்றிய ஆதாரத்துடன் எழிலிடம் காட்டிய ராஜேஷ் – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா மும்பைக்கு செல்ல இருப்பதில் உறுதியாக இருக்கிறார். மயூராவிற்கு இதில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ராதிகா தன்னுடைய மனதை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் கோபி இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு வருத்தமாக இருக்க, இதற்கிடையே ராஜேஷ் எழிலிடம் கோபி ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக ஆதாரத்துடன் காட்டி விடுகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராதிகா கோபி தொந்தரவு செய்வது பிடிக்காமல் இருப்பதால் அவர் மும்பைக்கு செல்ல இருப்பதாக முடிவு செய்கிறார். ராதிகாவின் அண்ணன் அம்மா என பலர் சொல்லியும் ராதிகா தன்னுடைய முடிவில் மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களுக்கு ராதிகா மீது கோவம் இருக்கிறது. மயூராவிடம் இது பற்றி ராதிகாவின் அம்மா சொல்ல ஆனால் மயூராவிற்கு புது இடத்திற்கு செல்வது பிடிக்கவில்லை. அதனால் ராதிகாவிடம் வேண்டாம் என பிடிவாதம் செய்ய ஆனால் ராதிகா மனம் மாறவில்லை.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே ராதிகா ஊரை விட்டு செல்லும் செய்தியை சொல்லி பாக்கியா கவலைப்பட அதை கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார். எதனால் அப்படி போறாங்க என கோபி கேட்க ராதிகா திருமணம் செய்ய இருப்பவரால் அடிக்கடி பிரச்சனை வருகிறது. அதனால் தான் போவதாக பாக்கியா சொல்ல கோபி அதை நினைத்து வருத்தப்படுகிறார். இந்நிலையில் நாளை வரும் எபிசோடில் பெரிய திருப்பம் வர இருக்கிறது அதாவது கோபி வீட்டிற்கு ராஜேஷ் வந்து பிரச்சனை செய்கிறார். ஈஸ்வரி இனியா முன்னால் ராஜேஷ் கோபியை பற்றி சொல்ல ஈஸ்வரி அதை நம்பவில்லை.
சென்னை: அதிரடியாக சவரனுக்கு ரூ. 160 உயர்ந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் கவலை!
அப்போது எழில் ராஜேஷை வெளியே அனுப்பி என் அப்பா தான் எல்லாத்தையும் விட்டுவிட்டார் என சொல்ல ராஜேஷ் அதெல்லாம் இல்லை என்னிடம் ஆதாரம் இருக்கிறது என ராதிகா கோபி சண்டை போடும் வீடியோவை காட்டுகிறார். அதில் ராதிகா இருப்பதை பார்த்து எழில் அதிர்ச்சி அடைகிறார். உன் அப்பா உன் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு என் மனைவியை திருமணம் செய்ய இருப்பதாக ராஜேஷ் சொல்ல எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.