மயூராவை கடத்தி திருமணத்தை நிறுத்த திட்டமிடும் ராஜேஷ் – பரபரப்பான திருப்பங்களுடன் “பாக்கியலட்சுமி”!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி தன்னுடைய குடும்பத்தை விட்டு வந்து ராதிகாவுடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் ராதிகா திருமணத்தை நிறுத்த ராஜேஷ் பெரிய சதி ஒன்றை செய்ய இருக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தன்னுடைய குழந்தைகளை பற்றி நினைக்காமல் ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். சந்துருவும் ராதிகாவின் அம்மாவும் ராதிகாவின் மனதை மாற்றி கோபியுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அதனால் கோபி பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். கோபி என்ன தான் குடும்பத்தை விட்டு வந்தாலும் இனியா மீது மிகுந்த பாசத்தில் இருக்கிறார்.
தனது திருமணத்தில் இனியா என்ன ட்ரெஸ் போட வேண்டும் என ஆசையுடன் ட்ரெஸ் வாங்கி வைத்திருக்கிறார். இதெல்லாம் ராதிகாவின் அம்மாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் ராதிகாவின் திருமண ஏற்பாடுகளை சந்துரு ஒரு பக்கம் கவனிக்க, மறுபக்கம் ராதிகா தனக்கு நல்ல வாழ்க்கை அமைய இருக்கிறது என சந்தோஷத்தில் சொந்தங்களையும், நண்பர்களையும் அழைக்கிறார்.
இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் கோபி ராதிகாவின் திருமணம் பற்றி ராஜேஷிற்கு உண்மை தெரிய வருகிறது. அதனால் ராஜேஷ் திட்டமிட்டு கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறார். ராஜேஷ் மயூராவை கடத்தி சென்று திருமணத்தை நிறுத்த நினைக்கிறார். அதனால் சீரியலில் பரபரப்பான காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. மயூரா கிடைப்பாளா, கோபி ராதிகா திருமணம் நடக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்