ராதிகா மீது போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்!
கோபியை மன்னித்து ராதிகா ஏற்றுக்கொள்வாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்போது ராஜேஷ் ராதிகா மீது புகார் கொடுத்து போலீசார் ராதிகாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை மறுபடியும் ராதிகா ஏற்றுக்கொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது பாக்கியா தான் கோபியின் மனைவி என்கிற உண்மை ராதிகாவிற்கு தெரிய வந்ததுமே நேராக கூறி விட்டு விலகி விடலாம் என ராதிகா நினைக்கிறார். ஆனால், கோபி ராதிகாவை விடுவதாக இல்லை. அவ்வப்போது ராதிகாவின் வீட்டிற்கு வந்து ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு தகராறு செய்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
எவ்வளவு கூறினாலும் கோபி ராதிகாவை தேடி வந்து கொண்டு இருப்பதால் கடுப்பான ராதிகா கோபியை பிடித்து வீட்டை விட்டு தள்ளுகிறார். கோபியுடன் ராதிகா சண்டை போட்டுக் கொண்டிருப்பதை ராஜேஷ் பார்த்து மிகவும் சந்தோஷப்படுகிறார். கோபி உன் வாழ்க்கையில் வந்ததுமே என்னை உன் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிந்து விட்டாய். தற்போது வேறு எவனோ ஒருத்தனுக்காக கோபியையும் தூக்கி எறிகிறாயா என ராதிகாவை கண்டபடி பேசுகிறார். இதுமட்டுமல்லாமல் மயூவை என்னுடன் அனுப்பியே தீரவேண்டும் என ராதிகாவிடம் ராஜேஷ் சண்டை போடுகிறார்.
சன் டிவியில் புதிய சீரியல் அறிமுகம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இதற்கு பின்பு ராஜேஷ் மற்றும் கோபி இருவருமே தன்னை ஏமாற்றி விட்டார்களே என ராதிகா நொந்துபோய் அமர்ந்திருக்கும் நேரத்தில் போலீஸ் ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார்கள். உங்களது கணவர் ராஜேஷ் உங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார். அதாவது உங்களது மகள் மயூவை நீங்கள் கொடுமைபடுத்துவதாகவும், இந்த வீட்டுக்கு வேறு யாரோ ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாகவும், எனது மகளுக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லை என மயூவின் அப்பா ராஜேஷ் புகார் கொடுத்திருக்கிறார். இதனால் உங்களை விசாரிக்க வேண்டும் உடனடியாக நீங்கள் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என கட்டாயப்படுத்தி போலீசார் ராதிகாவை அழைத்துச் செல்லும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.