கோபி ராதிகா திருமணத்தை தெரிந்து கொண்ட ராஜேஷ் – சீரியலில் அடுத்து நடக்கும் பூகம்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணம் முடிந்துள்ள நிலையில், ராஜேஷிற்கு விவரம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் மயூவை பார்க்க ராஜேஷ் வீட்டிற்கு வர உண்மையை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடைய குடும்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், அவர்களை எல்லாம் உதறி ராதிகா தான் முக்கியம் என குறிக்கோளுடன் இருக்கிறார். இந்நிலையில், கோபியும் ராதிகாவும் தற்போது கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்று இருக்கின்றனர். அங்கே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பார்க்க, மூர்த்தி கோபியிடம் பயங்கரமாக சத்தம் போடுகிறார்.
இந்நிலையில் பாக்கியாவின் நிலைமையை நினைத்து மூர்த்தியும், தனமும் வருத்தப்படுகின்றனர். ஆனால் கோபி அவர்களிடமும், ராதிகா தான் மனைவி என சொல்கிறார். அதை கேட்டு மூர்த்தி பயங்கர கோவப்பட்டாலும், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. இனி வரும் எபிசோடுகளில் கோபி ராதிகாவின் திருமணத்தை கேள்வி பட்டு ராஜேஷ் ராதிகா வீட்டிற்கு வருகிறார். நீ வேற கணவனை தேடிக் கொண்டாய் அதனால் என் மகளை என்னிடம் கொடுத்துவிடு என சண்டை போடுகிறார்.
விரைவில் அம்மா அப்பாவாக இருக்கும் பிரபல சீரியல் ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
Exams Daily Mobile App Download
ஆனால் ராதிகாவின் அம்மா, இனிமேல் ராதிகாவையும், மயூவையும் கோபி பார்த்துக் கொள்வார் என சொல்ல, அதை கேட்டு ராஜேஷ் அதிர்ச்சி அடைகிறார். இனி வரும் எபிசோடில் கோபி ராதிகா வாழ்க்கையில் ராஜேஷ் பிரச்சனை செய்ய இருக்கிறார். அதனால் கோபிக்கு பெரிய சிக்கல் வர இருக்கிறது. கோபியால் எல்லாத்தையும் சமாளிக்க முடியாமல் கடைசியில் பாக்கியா தான் சிறந்தவள் என நினைக்கும் அளவிற்கு கதையில் பல காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்