இன்று முதல் வார இறுதி ஊரடங்கு ரத்து, தியேட்டர்கள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் மாநில வாரியாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் 3வது அலை பரவல், டெல்டா ப்ளஸ் பாதிப்பு ஆகிய காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 50% திறனுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே வருகை புரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும்,அதே நிபந்தனையுடன் திறன் பயிற்சி மையங்களும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% திறனுடன் திறக்க அனுமதிக்கப்படும். இரவு 8 மணி வரை வெளிப்புற விளையாட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பாரதி கண்ணம்மா சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பாங்க? வெண்பா பளிச்!
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகபட்சம் 25 பேருடன் திருமண நிகழ்வுகள் அனுமதிக்கப்படும். ஆடிட்டோரியங்கள் மற்றும் கண்காட்சிகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% திறனுடன் மட்டுமே செயல்பட வேண்டும். மாநிலத்தில் இயங்கும் நகர பேருந்துகள் 100% இருக்கை வசதியுடன் இயக்க அனுமதிக்கப்படும். மேலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.