அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைப்பு – உயர்கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
பள்ளிகளின் நிலை:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக நடப்பு கல்வி ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து வகுப்புகள் சரிவர செயல்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிப்பதில் சிரமங்கள் இருந்தது. பள்ளிகளில் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் பள்ளிகள் அனைத்தும் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் – CEO உத்தரவு!!
தேர்வுகள் தள்ளிவைப்பு:
மாநில அரசு 1 முதல் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மேலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டது.
ஊரடங்கு:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் நேற்று வார இறுதி ஊரடங்கை அறிவித்தார். இதனால் ஏப்ரல் 16ம் தேதியான இன்று முதல் மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் ஏப்ரல் 17ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்றும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் மறுஅறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாகவும் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்