ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

0
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு - ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்புகளை திரும்ப பெறுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2 ஆம் அலை தாக்கம் நாடு முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக, ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலை 22 ஆம் தேதி அறிவித்தது. இதனிடையே ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பள்ளிகளை திறப்பது குறித்த முடிவை திரும்ப பெறுவதாகவும், பள்ளிகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ராஜஸ்தான் முதல்வர் தெரிவித்துள்ளார்.

BSNL நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – ஜூலை 31ம் தேதி கடைசி நாள்!

இது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் படி, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை அரசு ரத்து செய்கிறது. மேலும் 5 அமைச்சர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். பின்னர் பள்ளிகளை திறப்பதற்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை பல்கலை செமஸ்டர் தேர்வுகள் ரத்து – இன்டெர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள்!

அந்த வகையில் முதல்வர் தெரிவித்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவில் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, சுகாதார அமைச்சர் ரகு சர்மா, வேளாண் அமைச்சர் லால்சந்த் கட்டாரியா, உயர்கல்வித்துறை அமைச்சர் பன்வர் சிங் பாட்டி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் கார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குழு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதில் கவனம் தேவை என்பதால் அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!