ரூ.500க்கு வீட்டு சிலிண்டர் விநியோகம் – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராஜஸ்தான் அரசு!
நாடு முழுவதும் தற்போது கேஸ் சிலிண்டர்கள் விலை அதிக அளவு உயர்ந்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு குறைவான விலைக்கு சிலிண்டர்களை மக்களுக்கு அளிக்க உள்ளது.
சிலிண்டர் விலை:
சிலிண்டர்களின் விலையானது இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. தற்போதைய கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக தான் இந்த விலை உயர்வு நடந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மானியம் மீண்டும் கடந்த சில மாதங்களாக வழங்கப்படுகிறது.
ஜன. 5 வரை பள்ளிகள் மூடல் – மாநில கல்வித்துறை அறிவிப்பு… ராஜஸ்தானில் கடும் குளிர் எதிரொலி!
Follow our Twitter Page for More Latest News Updates
இருப்பினும், சிலிண்டர் விலை தற்போது ரூ.1100 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, BBL(வறுமை கோட்டுக்கு கீழ்) ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கேஸ் சிலிண்டர் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் ஏப்ரல் 2023 முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் முதல் வணிக சிலிண்டர்களின் விலை ரூ.25 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.