இன்று முதல் ஏப்ரல் 19 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் அம்மாநிலத்தில் இன்று (16-04-2021) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை உயர்ந்து வருகிறது. இதை தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய சூழல் உருவாகும். இதனை கருத்தில் கொண்டு கொரோனா அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 49 ஆயிரத்து 276 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 633 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 ஆயிரத்து 41 பேர் பலியாகியுள்ளனர். அம்மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று (16-04-2021) மாலை முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு!!
ஊரடங்கு காலத்தில் வார இறுதி நாட்கள் தவிர மற்ற நாட்களில் அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த போது, ‘கொரோனா வைரஸ் காரணமாக இன்று (16-04-2021) மாலை முதல் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த ஊரடங்கு நடைமுறைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.