ஜூன் 2 முதல் கடைகளை திறக்க அனுமதி – முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதன் காரணமாக சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த தளர்வுகள் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான ஊரடங்கின் பலனாக தற்போது கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநில அரசு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் இந்த தளர்வுகள் அனைத்தும் 10 சதவிகிதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு இருக்கும் மாவட்டங்கள் மற்றும் 60 சதவிகிதத்திற்கு கீழ் ஆக்சிஜன் பயன்பாடு, மருத்துவனை படுக்கை பயன்பாடு இருக்கும் பகுதிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி – தொடக்கக் கல்வி இயக்குனர்!
இந்த தளர்வுகளை அனைத்தும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி மாநில அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை 25 சதவிகித ஊழியர்களுடன் இயங்கவும், மேலும் ஜூன் மாதம் 7ம் தேதிக்கு பின்பு 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் அலுவலங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணி வரை 25 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
உள் மாவட்டங்களில் தனியார் வாகன இயக்கம் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கலாம் என்றும் ஜூன் 8ம் தேதிக்கு பின்பு மாநிலம் முழுவதும் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 அணி வரை போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி ஊரடங்கு வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் வார நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.