நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடிக்கு கோரிக்கை!!

0
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் மோடிக்கு கோரிக்கை!!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு - பிரதமர் மோடிக்கு கோரிக்கை!!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் மோடிக்கு கோரிக்கை!!

கொரோனா பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்துவது அவசியம் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

முழு ஊரடங்கு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்தியாவுடனான போக்குவரத்தை அண்டை நாடுகள் தடை செய்துள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 46% உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசானது தடுப்பூசியால் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தியைக் காலி செய்யும் திறனுடையதாக உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கேலாட் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று உரையாடினார். அப்போது, மாநிலங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஒத்துழைப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க வேண்டும்.

தமிழக கல்லுரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் வேகமாக பரவி வருகிறது. இதன் பாதிப்புகள் அதிவேகமாகவும், தீவிரமாகவும் இருக்கிறது. இதற்கு தடுப்பூசி ஒன்று மட்டும் தான் தீர்வாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தொற்றை வெல்ல முடியும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!