சந்தியாவை போலீஸ் ஆக்க சம்மதம் சொன்ன சிவகாமி, அதில் வைத்த ட்விஸ்ட் – “ராஜா ராணி 2” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியாவை சரவணன் கோச்சிங் கிளாஸ் கூட்டி செல்லும் விஷயம் சிவகாமிக்கு தெரிய வருகிறது. இந்நிலையில் சிவகாமி சந்தியாவை போலீஸ் ஆக்க சம்மதிக்கிறார். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார், அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
ப்ரோமோ ரிலீஸ்:
ராஜா ராணி 2 சீரியலில், சந்தியாவை எப்படியாவது போலீஸ் ஆக்க வேண்டும் என சரவணன் ஆசைப்பட்டு சந்தியாவை வீட்டிற்கு தெரியாமல் கோச்சிங் கிளாஸ் சேர்த்து விடுகிறார். சந்தியா பல முறை அத்தையிடம் சொல்லி விடுவோம் என சொல்லி கூட சரவணன் கேட்கவில்லை. இந்நிலையில் ஊருக்குள் சாமியார் ஒருவர் வர அவரை பார்க்க சிவகாமி குடும்பத்துடன் வருகின்றனர். அந்த சாமியார் இருக்கும் இடம் அருகே தான் சந்தியா படிக்கும் கோச்சிங் கிளாஸ் இருக்கிறது.
CSIR நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
குடும்பத்துடன் சிவகாமி அங்கே வர சந்தியாவையும், சரவணனையும் பார்த்து விடுகின்றனர். நீ எப்படி இங்கே என சிவகாமி சந்தியாவிடம் நீங்க எப்படி இங்கே என கேட்கிறார். உடனே சந்தியாவும் சரவணனும் சொல்லி சமாளிக்க சிவகாமிக்கு சந்தேகம் வருகிறது. அதனால் சந்தியா சிவகாமியிடம் உண்மையை சொல்லி விடுகிறார். மீண்டும் மீண்டும் சந்தியா தவறு செய்வதை பார்த்து சிவகாமி கோவமாக இருக்கிறார். இந்நிலையில் சிவகாமி பெரிய முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார்.
அதாவது சந்தியாவை போலீஸ் ஆக சிவகாமி அனுமதி கொடுக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன் என சிவகாமி சொல்ல சாமி அறைக்கு சென்று மூன்று குத்து விளக்குகளை எடுத்து வைக்கிறார். அதை எல்லாம் பற்ற வைத்துவிட்டு இந்த விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும். சந்தியா செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் இந்த விளக்குகள் அணைத்து கொண்டே வருவேன். இந்த மூன்று விளக்குகளும் அணைத்துவிட்டால் சந்தியா போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவை விட்டுவிட வேண்டும் என சொல்கிறார்.