சந்தியா, சரவணனின் வருகையை கண்டு மகிழ்ச்சி அடையும் குடும்பத்தினர் – “ராஜா ராணி 2” ப்ரோமோ!
சற்றும் பரபரப்புகளுக்கு குறையாமல் சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில், அடுத்த வார எபிசோடில் என்ன நடைபெறும் என ரசிகர்கள் கேள்விக்கு விருந்தாக நடைபெற உள்ள காட்சிகளின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ராஜா ராணி 2:
சந்தியாவின் தோழி செய்த தவறால் சந்தியா மீது சந்தேகம் கொள்ளும் சரவணன் அவருக்கு விவாகரத்து கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அனைவரும் சந்தியா வீட்டைவிட்டு செல்ல தடுக்கின்றனர். ஆனால் சரவணனும் வீட்டில் உள்ள அனைவரையும் தடுத்து சந்தியாவை வெளியே அனுப்புகிறார். இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிகின்றனர்.
‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அடுத்த வார எபிசோட்!
பிறகு சரவணன் சந்தியாவை பேருந்தில் வழியனுப்பி வைக்கிறார். சந்தியா ஏறிச்சென்ற பேருந்து விபத்தில் சிக்கி விடுகிறது. அதை பார்க்கும் சரவணன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அவர் சந்தியாவை தேடி அலைந்து கதறி அழுகிறார். அதன் பின், மற்றவர்களுக்கு சந்தியா உதவி செய்வதை பார்த்து சரவணன் நிம்மதி அடைகிறார். அதன்பின் இருவரும் ஓடிச்சென்று கட்டியணைத்து அழுகின்றனர். வீட்டில் உள்ள அனைவரும் உண்மை அனைத்தையும் அறிந்து இருவர் வருகைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெற உள்ள எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில் சரவணனும் சந்தியாவும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை பேசி தீர்த்து அழுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து அவளது காதலை வெளிப்படுத்துகின்றனர். அதன்பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். வீட்டில் உள்ளவர்களும் தெருவில் உள்ளவர்களும் அவர்கள் வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு ரவி சிவகாமியுடன் சரவணன் ஏன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பினான் என்ற உண்மையை சொல்கிறார். இதை கேட்டு சிவகாமி கோவம் அடைகிறார். உடனே சரவணன் சமாதானம் செய்கிறார். சந்தியா சரவணனின் காயத்திற்கு மருந்து போடுகிறார். பின் சரவணன் சந்தியாவின் காயத்திற்கு மருந்து போடுகிறார். இப்படி இருவரும் சேர்ந்து இருக்கும் காட்சி அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.