“ராஜா ராணி 2” ஆலியா மானசா தனது குழந்தைகளுடன் வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
தமிழ் சின்னத்திரையில் சிறந்த ஜோடியாக கலக்கி வரும் நடிகை ஆலியா மானசா சஞ்சீவ் அவர்களுக்கு தற்போது இரண்டாவதாக அர்ஷ் என்ற பையன் பிறந்திருக்கிறான். இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மருத்துவமனைக்கு ஆலியா வர ஊசி போடும் போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஆலியா மானசா:
விஜய் டிவியில் ராஜா ராணி தொடரில் இணைந்து நடித்த சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களுக்கு ஐலா என்ற மகள் இருக்கிறாள். தன்னுடைய மகள் பிறந்து சில மாதங்களில் ஆலியா சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் சீரியலில் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பிரசவத்திற்கு சில நாட்கள் முன்னர் வரை அவர் சீரியலில் நடித்து வந்த நிலையில் அதன் பின் குழந்தைக்காக சீரியலை விட்டு விலகினார்.
Exams Daily Mobile App Download
அவர்களுக்கு அர்ஷ் என்ற மகன் பிறந்திருக்கிறான். பிரசவத்திற்கு பின் குழந்தைகளை கவனித்து கொள்வதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் ஆலியா கொடுத்து வருகிறார். அர்ஷ் முகத்தை தற்போது வரை காட்டாத நிலையில் சிறப்பு நாளில் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆலியா சஞ்சீவ் இணைந்து தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும் அழகான தருணங்களை வீடியோவாக ஆலியா பதிவிடுவார்.
விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஜீவாவை கேள்வி கேட்ட ப்ரியா!
இந்நிலையில் தற்போது அர்ஷ் மற்றும் ஐலா பாப்பாவிற்கு ஊசி போட மருத்துவமனைக்கு சென்று அங்கே வீடியோ பதிவிட்டு இருந்தனர். அதில் ஐலா பாப்பாவிற்கு ஊசி போடும் போது பாப்பா அழுததை பார்த்து ஆலியாவும் அழுகிறார். இந்த அழகான மகள் அம்மா வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் ஆலியா சீக்கிரம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என பலர் ஆசைப்படுகின்றனர். அதனால் அவர் மறுபடியும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.