சந்தியாவை அழைத்து கவுரவிக்கும் கமிஷனர், குற்ற உணர்ச்சியில் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா போலி போலீசாரை பிடித்து கொடுத்ததை பாராட்ட கமிஷனர் வர சொல்கிறார். பின்னர் சரவணனிடம் நீங்க உங்க மனைவிக்கு ஆதரவாக இருக்கீங்க அதனால் மேற்கொண்டு அவரை படிக்க வைங்க இல்லையென்றால் வேலைக்கு அனுப்புங்க என சொல்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று ராஜா ராணி 2 சீரியலில், சந்தியா போலி போலீசார் வேடமிட்டு திருடனை பிடித்து கொடுத்ததால் கமிஷனர் அவரை பார்க்க வேண்டும் என வர சொல்கிறார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கியதும் சில்லறை இல்லை என சரவணன் சில்லறை மாற்ற செல்கிறார். சந்தியா உள்ளே முதலில் செல்ல, வெளியே இருக்கும் காவலர் சரவணனை உள்ளே அனுப்ப மறுக்கிறார். அப்போது சந்தியா சரவணனை காணவில்லை என நினைத்து வெளியே வந்து பார்க்கிறார்.
சரவணன் உள்ளே அனுமதிக்காததால் சந்தியா அவரை கோவமாக பேசுகிறார். பின்னர் கமிஷனரை பார்க்க வர கமிஷனர் சந்தியாவை பார்த்து மிகுந்த சந்தோசப்படுகிறார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த கமிஷனர். நீங்க இன்னும் நன்றாக வர வேண்டும் என ஆங்கிலத்தில் பேசிக் கொள்கின்றனர். சரவணன் ஒன்றும் தெரியாமல் இருக்க சரவணன் எதுவும் புரியாமல் இருக்கிறார். அப்போது சந்தியா இது என் கணவர் சரவணன் என சொல்கிறார்.
உடனே கமிஷனர் சரவணன் தன் மனைவிக்கு ஆதரவாக இருப்பதை சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் சரவணனுக்கு ஆங்கிலம் தெரியாது தமிழ் தான் தெரியும் என சந்தியா சொல்கிறார். உடனே கமிஷனர் சந்தியாவை இப்படி செய்ய அனுமதி வழங்கியதை நினைத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அப்போது சந்தியா என்ன படித்திருக்கீர்கள் என கேட்கிறார். அவர் எம்.காம் என சொல்கிறார். மேலும் பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடல் என சொல்கிறார்.
பின்னர் அர்ச்சனா செந்திலை நினைத்து புலம்பிக் கொண்டிருக்க, சிவகாமி அதை கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே இருந்தால் அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவேன் என அர்ச்சனா சொல்ல சிவகாமி கேட்டு அதிர்ச்சி அடைகிறார். சிவகாமி என்னாச்சு அர்ச்சனா என கேட்க செந்தில் பத்தி சொல்லவிடுவோமா என நினைத்து பார்க்கிறார். கொஞ்ச நாளாக பார்க்கிறேன் நீ ஒரு பக்கம் சென்றால் செந்தில் ஒரு பக்கம் போகிறான் என சொல்கிறார். அது எல்லாம் ஒன்றுமில்லை என அர்ச்சனா சமாளிக்கிறார்.
அப்போ வீட்டிலேயே இருக்காமல் எதாவது வேலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என கமிஷனர் சொல்கிறார். பின்னர் சந்தியாவிற்கு சால்வை போர்த்தி வாழ்த்து தெரிவித்து போட்டோ எடுத்து கொள்கிறார். சரவணன் வெளியே வர பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது சரவணனை காவலாளி ஒருவர் தாழ்வாக பேசுகிறார். படித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு நன்றாக இருக்கிறான் என பேசுகிறார். அதை கேட்டு சரவணன் வருத்தப்படுகிறார்.
பின்னர் சந்தியா சரவணன் கமிஷனர் அனைவரும் சேர்ந்து பத்திரிகையாளரிடம் பேசுகின்றனர். சரவணனிடம் கமிஷனர் இவ்வளவு படித்த பெண்ணை நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என சொல்கிறார். சரவணன் சரி என்று சொல்கிறார். பின்னர் சந்தியா பேசுகிறார். சின்ன வயதில் இருந்து தன் அப்பா தைரியமான பெண்ணாக வளர்த்தார் அதுவே நான் இப்படி நடந்து கொள்ள காரணம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.