சுற்றுலா செல்ல திட்டமிடும் சந்தியா & சரவணன், ஏற்றுக் கொள்வாரா சிவகாமி – இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், அர்ச்சனா பிறந்தநாளை முன்னிட்டு செந்திலுடன் படம் பார்க்க செல்கின்றனர். அங்கே செந்தில் அப்பா வந்து அவர்களை பார்த்து விடுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், துணி கடையில் வாடிக்கையாளர் ஒருவர் சேலை புடிக்காமல் இருக்க செந்தில் வந்து சில சேலைகளை எடுத்து கொடுக்கிறார். உடனே அங்கே வந்த அர்ச்சனா சுமூகமாக பேசி சேலையை வாங்க வைத்து விடுகிறார். உடனே இருவரும் படத்திற்கு கிளம்ப திட்டமிடுகின்றனர். பின் பாஸ்கர் பார்வதிக்கு போன் செய்கிறார். அப்போது பாஸ்கர் குரல் ஒரு மாதிரி இருக்கிறது என பார்வதி கேட்க, பாஸ்கர் எதுவும் இல்லை என சொல்ல, விக்கி பற்றி தெரிந்திருக்குமா என பார்வதி பதட்டப்படுகிறார்.
அப்போது பாஸ்கர் பணம் தேவைப்படுவதாக சொல்ல பார்வதி என்னுடைய நகையை கொடுக்கவா என கேட்கிறார். 5 லட்சம் தேவைப்படுகிறது என சொல்ல, அண்ணனிடம் கேட்கவா என பார்வதி சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் என பாஸ்கர் சொல்ல, நான் உங்களது பணத்தை பார்த்து திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளவில்லை என சொல்கிறார். உடனே பாஸ்கர் போனை வைக்க நல்லவேளை விக்கி பற்றி தெரிந்துவிடவில்லை என நினைக்கிறார்.
பின் செந்தில் அர்ச்சனா படத்திற்கு செல்ல அங்கே சுந்தரம் வருகிறார். அவர் செந்தில் அர்ச்சனாவை பார்த்துவிட்டு இந்த வேலை எல்லாம் நடக்கிறதா என நினைக்கிறார். பின் கேண்டீனில் சமோசா வாங்கி சாப்பிட செல்ல அப்போது அர்ச்சனா செந்தில் அவரை பார்த்துவிடுகிறார். மயில் துவைத்த துணிகளை மடித்து வைத்து கொண்டிருக்கும் போது சுந்தரத்தின் சட்டையில் இருந்து சினிமா டிக்கெட் ஒன்றை எடுக்கிறார். உடனே சிவகாமி கோவத்தில் இருக்க, அந்த நேரம் பார்த்து அர்ச்சனா செந்தில் வருகின்றனர்.
அவர்களை தான் சிவகாமி திட்டுகிறார் என நினைத்து உண்மையை சொல்ல போக, சுந்தரம் அங்கே வர அவரை தான் சொல்கிறார் என தெரிகிறது. பின் அர்ச்சனாவிடம் கேட்க, அர்ச்சனாவுக்கு பிறந்த நாள் என செந்தில் சொல்கிறார். உடனே இதெல்லாம் தப்பு இல்லை என சுந்தரம் சொல்கிறார். பின் சந்தியா சரவணனும் பேசி கொண்டிருக்க, இந்த வேலை செய்து போர் அடிக்கவில்லையா என கேட்கிறார். அடிக்கிறது என சொல்ல, நம்ம ஊர் பக்கமே நிறைய சுற்றுலா தளங்கள் இருக்கிறது அங்கே குடும்பத்துடன் போவோம் என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.