சந்தியாவின் ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்ல சொல்லும் அனிதா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி சந்தியாவிடம் விக்கி ஜன்னல் ஓரமாக நிற்பது போல கனவு வந்ததாக சொல்கிறார். உடனே சந்தியா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அர்ச்சனாவை சந்தித்த விக்கி பார்வதி கல்யாணத்தை நிறுத்த ஏன் நினைத்ததாக கேட்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று ” ராஜா ராணி 2″ சீரியலில், பார்வதி சந்தியாவிடம் இரவு கனவு ஏற்பட்டதாக சொல்கிறார். அந்த விக்கி ஜன்னல் ஓரத்தில் நிற்பது போல கனவு வந்தது என சொல்கிறார். உடனே சந்தியா அதை மறந்து வேறு விஷயத்தில் கவனம் செலுத்துமாறு சொல்கிறார். நல்ல வேலை உன் அண்ணனிடம் சொல்லாமல் இருந்த என சொல்ல, ஏன் அண்ணி அண்ணனிற்கு எல்லாம் தெரியுமே என சொல்கிறார் பார்வதி. இல்லை அர்ச்சனா பற்றி உன் அண்ணனிற்கு இப்போதைக்கு தெரிய வேண்டாம் என சந்தியா சொல்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனா கடைக்கு சென்று கொண்டிருக்க விக்கி போன் செய்து கொண்டே இருக்கிறார். அர்ச்சனா இரண்டு மூன்று முறை போனை எடுக்காமல் இருக்க, விக்கி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்கிறார். அப்போது அர்ச்சனா போனை எடுத்து எதுக்கு எனக்கு போன் செய்கிறார் என கேட்கிறார். எனக்கு உன்னிடம் பேச நேரமில்லை என அர்ச்சனா சொல்ல, அர்ச்சனாவுக்கு நேராக விக்கி வந்து நிற்கிறார். அர்ச்சனாவிடம் உன்னால் தான் நான் அடி வாங்குனேன் என சொல்ல, அதற்கு நான் என்ன செய்ய என அர்ச்சனா சொல்கிறார்.
விக்கி அர்ச்சனாவிடம் ஏன் பார்வதி கல்யாணம் நடக்க கூடாது என ஏன் நினைக்கிற என கேட்க, அந்த பாஸ்கரை நான் தான் என் தங்கச்சிக்கு பார்த்தேன் ஆனால் அந்த பார்வதி பாஸ்கரை மயக்கி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஆனால் என் தங்கச்சி பாஸ்கரை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருக்கிறார் என சொல்கிறார். பின் சரவணன் மெட்டியை தேடி கொண்டிருக்க சந்தியா கொண்டு வந்து கொடுக்கிறார். சரவணன் மாட்டி விடும்படி சொல்கிறார். அர்ச்சனா அங்கிருந்து கிளம்ப வீட்டில் அர்ச்சனா வாங்கி வந்த காய்கறிகள் நன்றாக இல்லை என குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார் சிவகாமி.
அந்த நேரம் பார்த்து அர்ச்சனா வர வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்கிறேன் என சொல்கிறார். ஏன் திடீரென இப்படி செய்கிறாய் என கேட்க, அந்த நேரம் பார்த்து சந்தியா வருகிறார். தான் கடைக்கு செல்ல இருப்பதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். அர்ச்சனா பார்வதி மாப்பிள்ளையிடம் போன் பேசுவதாக சிவகாமியிடம் சொல்கிறார். சிவகாமி அங்கிருந்து கிளம்ப செந்தில், சினிமாவிற்கு போவதாக சொல்லிவிட்டு இப்படி வீட்டில் எல்லா வேலையும் செய்கிறேன் என சொல்ற என கேட்கிறார்.
அர்ச்சனை அதற்கு ஒரு திட்டம் இருக்கிறது. நீங்க கடைக்கு போய்விட்டு அங்கிருந்து நான் சொல்வதை செய்ங்க என சொல்கிறார். சந்தியா கடைக்கு சென்ற இடத்தில் அவர் தோழி அனிதா வருகிறார். அவர் அந்த விபத்து பற்றி கேட்டுவிட்டு எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்னால் தான என மன்னிப்பு கேட்கிறார். உங்க மாமியாருக்கும் எனக்கும் எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க, என் மீது இல்லை சரவணன் மீது தான் அத்தைக்கு கோவம் என சொல்கிறார்.
பின் நடந்தது அனைத்தையும் சொல்ல, சண்டை காட்சியில் ஆரம்பித்து இப்போது செண்டிமெண்ட் காட்சியில் முடிந்துள்ளது. அப்போ இனிமேல் நீயும் சரவணனும் நன்றாக இருக்கீங்க தான என கேட்க ஆமாம் என சந்தியா சொல்கிறார். அது உன் முகத்தில் இருக்கிறது என அனிதா சொல்கிறார். அப்போ உன்னுடைய ஐபிஎஸ் கனவை சரவணனிடம் சொல்லு என அனிதா சொல்ல, நல்ல நேரம் வரட்டும் என சந்தியா சொல்கிறார். இப்பவே சென்று இனி சரவணனிடம் சொல்லிவிட்டு நல்ல செய்தியை எனக்கு சொல்லு என அனிதா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.