காதலை வெளிப்படுத்தும் சரவணன் & சந்தியா, கோபத்தில் அர்ச்சனா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணனும் சந்தியாவும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். அப்போது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல் வெளிப்படுகிறது. பின் அர்ச்சனா சந்தியாவை புகழ்ந்தது குறித்து செந்திலிடம் கோபப்படுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா புயல் அடித்து ஓய்ந்தது போல இருக்கிறது என சொல்கிறார். அப்போது சரவணன் வர சந்தியா கீழே படுக்க கூடாது என நினைக்கிறார். சரவணனும் கீழே படுக்க வேண்டாம் என நினைக்க அதை எப்படி சொல்வது என கூச்சத்தில் இருக்கிறார்கள். பின் சந்தியாவும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ரசித்துக் கொண்டிருக்கின்றனர். சந்தியா சில புத்தகங்களை எடுத்து கொண்டுவந்து அட்டை போட அமர்கிறார்.
அப்போது இது யாருடையது என கேட்க, என்னுடைய 1 ஆம் வகுப்பு முதல் காலேஜ் படிக்கும் போது வரை உள்ள புத்தகங்களை பத்திரமாக வைத்திருக்கேன். அதை ஒவ்வொரு ஆண்டும் எடுத்து அட்டை போடுவேன் என சொல்கிறார். பின் சந்தியா கப்பல் செய்து சிறு வயது ஞாபகங்களை பகிர்ந்து கொள்கிறார். சந்தியா கப்பல் செய்து காட்டுகிறார். பின் சரவணனும் சிறு வயது ஞாபகங்களை பற்றி பேசி சிரித்து கொள்கின்றனர். பின் சரவணன் கீழே படுக்க செல்ல சந்தியா வேண்டாம் என்பது போல பார்க்கிறார்.
சந்தியாவிற்கு லேசாக முதுகில் அடிபட்டுள்ளது என சொல்லி சரவணனிடம் மருந்து கொடுத்து போட சொல்கிறார். சரவணன் போட சந்தியா அதை வெக்கத்துடன் ரசிக்கிறார். பின் சந்தியா சரவணனுக்கும் மருந்து போடுகிறார். சரவணன் கீழே படுக்க செல்ல, சந்தியா என்ன சொல்வதென்று தெரியாமல் ஏக்கத்துடன் பார்க்கிறார். பின் லைட் அமத்திவிட்டு படுக்க செல்ல, சரவணன் கீழே எலி இருக்கிறது என சொல்லி கிண்டல் செய்கிறார்.
மறுபக்கம் அர்ச்சனாவும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன தான் சந்தியா வந்திருந்தாலும் அவரை ரொம்ப புகழ்ந்து பேசுகின்றனர் என அர்ச்சனா கோபத்துடன் இருக்க, நாம் எதுவும் செய்யாமல் இருந்தாலும் நமக்கு தவறாக முடியுது. ஆனால் அவர்கள் பிரச்சனையில் தொடங்கினாலும் அவர்களுக்கு எல்லாம் நன்றாக அமையுது என சொல்லி கோவத்தில் இருக்கிறார். இவர் பேச்சை கேட்கலாமா வேண்டாமா என செந்தில் குழப்பத்தில் இருக்கிறார்.
மறுநாள் காலையில் சரவணன் குளிக்க செல்ல சந்தியா சூடு தண்ணி வைத்து கொடுக்கவா என கேட்கிறார். ஆனால் வேண்டாம் நான் சந்தோசமாக இருக்கிறேன் அதான் ஜில்லுனு குளிக்க செல்கிறேன் என சொல்கிறார். அப்போது சந்தியாவின் அண்ணன் போன் செய்கிறார். எதுவும் பிரச்சனை இல்லையே என கேட்க, எல்லாம் சரியாகி விட்டது என சொல்லி சரவணனிடம் போனை கொடுக்கிறார். சரவணனிடம் உங்களை நம்பி தான் சந்தியாவை அங்கே விட்டிருக்கிறோம் நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறார் எல்லாம் சரியாகிவிட்டது என சொல்லி சந்தோசமாக போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.