பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் – பரபரப்பான இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

0
பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் - பரபரப்பான இன்றைய
பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் - பரபரப்பான இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!
பஸ் விபத்தில் சிக்கும் சந்தியா, காப்பாற்றுவாரா சரவணன் – பரபரப்பான இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பாஸ்கர் மற்றும் அவரது அம்மா திடீரென வந்ததும் என்ன சொல்ல போகிறார்கள் என குழப்பத்தில் சிவகாமி இருக்கிறார். அவர் சந்தியா மீது தவறில்லை என தெளிவாக விளக்கி சொல்கிறார். பின் சந்தியா செல்லும் பேருந்து சரவணன் கண் முன்னே விபத்தில் சிக்குகிறது.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பாஸ்கரும் அவர் அம்மாவும் சிவகாமி வீட்டிற்கு வருகின்றனர். சிவகாமி சந்தியா வீட்டை விட்டு வெளியே போனது தெரிய கூடாது என பதட்டப்படுகிறார். வந்தவர்களை வாங்க என அழைத்து விட்டு சிவகாமியை காபி எடுத்துக் கொண்டு வரும்படி சொல்கிறார். சிவகாமி உள்ளே சென்று பார்வதியிடம் சந்தியாவை வெளியே அனுப்பியதை மாப்பிள்ளையிடம் சொல்லாதே என சொல்கிறார். பின் பார்வதி மட்டும் வர எங்கே காபி என ஆதி கேட்கிறார்.

பின்னால் சிவகாமி காபி கொண்டு வர, பாஸ்கர் அம்மா முக்கியமான விஷயம் பேச தான் வந்திருக்கேன் என சொல்கிறார். அதான் படிப்பு முடிந்த பின்னர் திருமணம் செய்யலாம் என சொன்னீங்களே என சிவகாமி சொல்ல, இப்ப கூட அதான் சொல்கிறேன். படிப்பு தான் மிகவும் முக்கியம், படிப்பு மட்டும் இருந்தால் அவள் சொந்த காலில் நிற்க முடியும் என பாஸ்கர் அம்மா சொல்கிறார். இது சந்தியா சொன்ன பின்னால் தான் எனக்கே தெரிந்தது என சொல்ல, உடனே சரவணனன் அப்பா, சந்தியா உங்க வீடு தேடி வந்து இப்படி சொல்லுற பொண்ணு இல்லையே என சொல்கிறார்.

பாரதிக்கு நலங்கு வைக்கும் கண்ணம்மா – வில்லி பரினாவின் சீமந்த நிகழ்ச்சி தருணங்கள்!

இதான் நடந்திருக்கும் என எங்களுக்கு தெரியும் அதான் வேகமாக வந்தோம் என சொல்கிறார். சந்தியா என்னிடம் சொல்லவும் இல்லை எங்க வீட்டிற்கு வரவும் இல்லை. உங்களிடம் அவள் பேசிக் கொண்டிருப்பது என் காதில் விழுந்தது அப்போது தான் எனக்கு படிப்பு பற்றி ஞாபகம் வந்தது என சொல்லி தெளிவு படுத்துகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல, உடனே சரவணனுக்கு போன் செய்து சொல்லுங்க என அனைவரும் சொல்கின்றனர்.

ஆனால் இதெல்லாம் அடிக்கடி நடப்பதால் தான் சரவணன் சந்தியாவை அனுப்பினான் என சரவணனன் அப்பா சொல்கிறார். பார்வதி சந்தியா அண்ணிக்கு என் மீது பொறாமை என சொன்னீங்க ஆனால் அவங்க எதுவும் பண்ணவே இல்லை அவங்க ரொம்ப நல்லவங்க என ஆதியிடம் சண்டை போடுகிறார். பின் சரவணன் பஸ்சில் இருந்து இறங்கி டீ குடிக்க செல்கிறார். அப்போது சந்தியா கீழே இறங்கி சரவணனுக்கு போன் செய்கிறார். பின் சந்தியா பேருந்தில் எற, சரவணனுக்கு தெரிந்தவர் ஒருவர் சரவணனை போக விடாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

குழந்தை வேண்டுமா என யோசிக்கும் செழியன், பாக்கியாவிற்கு குவியும் பாராட்டுகள் – இன்றைய எபிசோட்!

அப்போது சந்தியாவிற்கு சீட் இல்லாமல் நிற்க பேருந்து கிளம்புகிறது. சரவணன் பேருந்தில் எற வர, ஒரு லாரி வேகமாக வந்து பேருந்தில் மோதி விடுகிறது. அதை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறார். பின் அனைவரும் அடிபட்டு இருக்க, போலீசாரும், அம்புலன்ஸ் வருகிறது. சரவணன் சந்தியாவிற்கு என்ன நடந்திருக்கும் என தேட அனைவரும் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கின்றனர். சிவகாமி வீட்டில் கவிதா வந்து சரவணன் போன பேருந்து பற்றி கேட்கிறார்.

அந்த வழியே சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதை சொன்னதும் குடும்பத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது சரவணன் சந்தியாவை எல்லா இடமும் தேடி என்ன நடந்தது என தெரியாமல் அழுகிறார். ஏற்கனவே அடிபட்டவர்களை கொண்டு சென்று இருக்கிறார்கள் என போலீசார் சொல்கின்றனர். சரவணன் சந்தியாவை நினைத்து கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!