சமையல் போட்டியில் சரவணனை கலந்து கொள்ள சொல்லும் சந்தியா? ‘ராஜா ராணி 2’ இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சரவணனை நினைத்து வருத்தப்படுகிறார். என்னை கல்யாணம் செய்யாமல் இருந்தால் நிம்மதியாக இருந்திருப்பார் என நினைக்கிறார். பின் சஞ்சனா பாஸ்போர்ட் கிடைத்ததை நினைத்து சந்தியாவிடம் நன்றி சொல்ல வருகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சரவணனை நினைத்து வருத்தப்படுகிறார். என்னை கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால் நீங்க குழந்தை பொண்டாடி என சந்தோசமாக இருப்பீங்க ஆனால் இப்போ என்னை கல்யாணம் திருமணம் செய்து கொண்டு இப்படி கஷ்டப்படுறீங்க என புலம்புகிறார். அதை அனைத்தையும் சரவணன் கேட்டுக் கொண்டிருக்க சரவணன் பாய்யை எடுத்து கீழே படுக்க வருகிறார். பின் சந்தியா தூங்க சரவணன் சந்தியா காலை அமுக்கிவிடுகிறார்.
மறுநாள் அனைவரும் அமர்ந்திருக்க சிவகாமி கோவமாக இருக்கிறார். அது போதாது என ஆதி மற்றும் செந்தில் கோபப்படுவது போல பேசுகிறார். அப்போது சரவணன் சஞ்சனாவை அழைத்து வருகிறார். இது யார் என தெரியாமல் குடும்பத்தில் அனைவரும் இருக்க அவர் நான் தொலைந்து போன பாஸ்போர்ட் நினைத்து வருத்தமாக இருந்தேன். அம்மா அப்பாவை பார்க்க தான் இங்கே வந்தேன் அதன் பின் டிக்கெட் போட செல்லும் போது தான் என்னுடைய பாஸ்போர்ட் காணவில்லை என தெரிந்தது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷபானா – ‘செம்பருத்தி’ சீரியல் பிரபலமான கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
நல்லவேளை நீங்க கண்டுபிடித்து கொடுத்தீங்க என சொல்லி சந்தியாவிற்கு பரிசு ஒன்றை தருகிறார். அதை திறந்து பார்த்தால் அதில் வாட்ச் இருக்கிறது. அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள். பின் சரவணன் செய்த இனிப்பை சாப்பிட்டு சஞ்சனா நன்றாக இருக்கிறது என பாராட்டுகிறார். கை கழுவ எங்கே செல்ல வேண்டும் என கேட்க, சந்தியா பின்னால் வந்து காட்டுகிறார். அப்போது சஞ்சனா சென்னையில் சமையல் போட்டி ஒன்று நடக்க இருப்பதாக சொல்கிறார்.
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் ஆலோசனை!
நீங்க கலந்து கொண்டால் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள் என சொல்ல, சந்தியா யோசித்து முடிவை சொல்கிறேன் என சொல்கிறார். பின் சஞ்சனா சென்றுவிட, சந்தியா அந்த சமையல் போட்டியை பற்றி சொன்னால் கண்டிப்பாக அவர் ஒத்துக் கொள்வார் என நினைத்து கொண்டிருக்க சரவணன் கண்ணில் மிளகாய்ப்பொடி விழுகிறது. உடனே சந்தியா சரவணன் கண்ணை சரி செய்கிறார். அப்போது கடையில் அனைவரும் இருக்க சிவகாமி அதை பார்த்துவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.