பார்ட்டிக்கு சென்ற சரவணன் குடும்பத்தினர், மனம் விட்டு பேசும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் குடும்பத்துடன் பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கே அனைவரும் சந்தோசமாக நடனம் ஆட, சிவகாமி ஜூஸ் என நினைத்து மது குடித்துவிடுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று ராஜா ராணி 2 சீரியலில், சரவணன் கோட் எல்லாம் போட்டு பார்ட்டிக்கு கிளம்புகின்றனர். சரவணன் அப்பா அங்கே சென்று சந்தோசமாக விளையாட வேண்டும் என கிளம்புகிறார். பார்ட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல, அங்கே எல்லாரும் நடனம் ஆடுவதை பார்த்து சிவகாமிக்கு பிடிக்காமல் இருக்கிறது. ஆனால் அவர்கள் கூப்பிட்டார்கள் என அதனால் இருக்க வேண்டும் என சந்தியா சொல்கிறார். ஆதி நடனம் ஆடுவியா என சரவணன் அப்பா கேட்க அதெல்லாம் ஆடுவேன். வீட்டில் தான் அப்படி இருப்பேன் என சொல்கிறார்.
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் மதிப்பூதிய அடிப்படையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
பின் ஆதி நடனம் ஆட செல்ல, அர்ச்சனா நாம நடனம் ஆடுவோம் என செந்திலிடம் சொல்கிறார். பின் செந்தில் சரி என சொல்ல, அவரும் நடனம் ஆட செல்கிறார். அப்போது அது எல்லாம் பிடிக்காமல் சிவகாமி இருக்க எதாவது சாப்பிட கிடைக்குமா என பாப்போம் என்று சுந்தரம் அழைத்து செல்கிறார். அவர் சென்று ஜூஸ் என்று இணைந்து மதுபானம் கொண்டு வர அதை தெரியாமல் சிவகாமி குடித்துவிடுகிறார். பின் சிவகாமிக்கு தலை சுற்ற அவர் சரியாக சாப்பிடவில்லை என சொல்லி இன்னும் ஜூஸ் குடிக்க சொல்கிறார்.
சரவணன் நின்று கொண்டிருக்க ஒரு பெண் வந்து என்ன இங்கே நிற்கிறீர்கள் வாங்க நடனம் ஆடலாம் என சொல்லி அழைத்து சென்று நடனம் ஆடுகிறார்கள். அதை பார்த்து சந்தியா பொறாமை பட்டு சென்று விட சரவணன் பின்னால் சென்று சிறு பையனை அனுப்பி முத்தம் கொடுக்க சொல்கிறார். பின் சந்தியா வந்து நீங்க தான் அந்த பெண்ணுடன் நடனம் ஆடுறீங்களா என கேட்க நீங்க வாங்க நாம ஆடுவோம் என சரவணன் கூப்பிடுகிறார். பின் இருவரும் ஆட நடனம் ஆடுவதற்கு படித்திருக்க வேண்டும் என சரவணன் சொல்கிறார்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரொக்கம்? விரைவில் அறிவிப்பு!
அப்படி எல்லாம் இல்லை, சமையல் செய்ய படிக்கவா வேண்டும் அது போல தான் என சொல்ல, அடுத்து சந்தியா என்னை திருமணம் செய்ததால் சந்தோசமாக இருக்கீங்களா என கேட்கிறார். அதை நான் தான் கேட்க வேண்டும் என சொல்ல, நான் சாதாரண சமையல் செய்பவன் நீங்க மாநில அளவு முதலிடம் வந்தவர் என பெருமையாக சொல்கிறார். அதை பற்றி இப்போது பேச வேண்டாம் இது சந்தோசமாக இருக்கும் நேரம் என சந்தியா சந்தோசமாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைகிறது.