தள்ளி போன பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியாவின் பேராசிரியர் வழங்கிய அட்வைஸ் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

0
தள்ளி போன பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியாவின் பேராசிரியர் வழங்கிய அட்வைஸ் - இன்றைய
தள்ளி போன பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியாவின் பேராசிரியர் வழங்கிய அட்வைஸ் - இன்றைய "ராஜா ராணி 2" எபிசோட்!!
தள்ளி போன பார்வதி நிச்சயதார்த்தம், சந்தியாவின் பேராசிரியர் வழங்கிய அட்வைஸ் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கு நிச்சய ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மாப்பிளைக்கு வேலை இருப்பதால் நிச்சயத்தை வேறு ஒரு நாள் நடத்த இருப்பதாக தெரிவிக்கிறார். அதை கேட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் வருத்தப்படுகின்றனர்.

ராஜா ராணி 2:

இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது மாப்பிள்ளையின் அம்மா போன் செய்கிறார். நிச்சயதார்த்தம் நடக்கப்போவதில்லை என சொல்கிறார். என்ன நடந்தது என கேட்க, மாப்பிளைக்கு முக்கியமான வேலை வந்துவிட்டது. அதனால் நிச்சயத்தை இன்னும் 2நாள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என சொல்கிறார். திடீரென இப்படி சொன்னால் எப்படி என கேட்க, வேற வழி இல்லை எந்த பிரச்சனையும் இல்லை என சொல்கிறார்.

சரி என சொல்லி பார்வதி அப்பா போனை வைக்கிறார். குடும்பத்தினரிடம் மாப்பிள்ளையின் அம்மா சொன்னதை சொல்கிறார். சிவகாமி அதை கேட்டு கவலைப்படுகிறார். விக்கி பற்றி தெரிந்திருக்குமா என நினைத்து சந்தியா குழப்பமடைகிறார்.பின்னர் சரவணன் செந்தில் ஆதி என அனைவரையும் அழைத்து நிச்சயம் தள்ளி போனதை சொல்கிறார்.

ராதிகாவிற்கு சேலை வாங்க அழைத்து செல்லும் கோபி, இருவரையும் பார்த்துவிடும் செல்வி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

பின்னர் சரவணன் இனிப்பு டெலிவெரி செய்ய போக நானும் வருகிறேன் என சந்தியா கிளம்புகிறார். அப்போது அங்கே சந்தியாவின் பேராசிரியர் ஒருவர் இருக்கிறார். அவர் சந்தியா இனிப்பு கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன சந்தியா இங்க என கேட்க இவர் தான் என் கணவர் என சொல்கிறார். அதை கேட்ட பேராசிரியர் இவரா என ஒரு மாதிரி பார்க்கிறார்.

பின்னர் சரவணன் பில் கொடுக்க சில்லறை இல்லை என சரவணனன் மாற்ற செல்கிறார். அப்போது பேராசிரியர் உனக்கு ஐஏஎஸ் ஆவது கனவு என்னாச்சு என கேட்கிறார். நான் நன்றாக இருக்கிறேன் என சந்தியா சொல்ல, உனக்கு பாராட்டு விழா நடத்தி பெரிய ஆளாக வருவாய் என நினைத்தேன் உன் அம்மா அப்பா இறந்துவிட்டார்கள் என கேள்விப்பட்டேன் ஆனால் உன் அண்ணன் அண்ணி உன்னை பார்த்துக் கொள்வார்கள் என நினைத்தேன் என சொல்கிறார்.

ஜீவா உதவி செய்ததை கண்ணனிடம் சொல்லும் நண்பன், மூச்சு பேச்சில்லாமல் இருக்கும் பார்வதி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

பெண்ணாக இருந்து இப்படி இருக்க கூடாது. உன் படிப்பு கனவு எல்லாம் வீணாக கூடாது. நீ இப்படியே இருக்காமல் சிறகு கட்டி பறக்க வேண்டும் என சொல்கிறார். சரவணனன் சில்லறை மாற்றி கொடுக்க, 100 ரூபாய் அதிகமாக கொடுத்துவிட்டார். இத்தனை வருடம் வியாபாரம் பார்த்து இன்னும் சரியாக சில்லறை கொடுக்க தெரியவில்லை என பேராசிரியர் பேசுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!