உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் சந்தியா, பாசத்துடன் கவனிக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இன்று, சந்தியாவிற்கு மழையில் நனைந்தால் சளி பிடித்துவிடுகிறது. சரவணனை அவரை பாசத்துடன் பார்த்துக் கொள்கிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதிக்கு வந்த மாப்பிளையை கல்யாணம் செய்து வைக்கலாம் என சிவகாமியை அவரது கணவர் சமாதானம் செய்கிறார். இந்த காலத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சரி தான் என்று சொல்ல, பிள்ளைங்க சந்தோசமாக இருப்பது தான் முக்கியம் என்று சொல்கிறார். அப்போது அர்ச்சனா அங்கே வர மாமா சொல்வது சரி தான் என்பது போல சொன்னாலும் பேங்க் வேலை செய்பவர்கள் எல்லாரும் சரியாக இருக்கமாட்டாங்க என்று சொல்கிறார்.
உடனே நானும் பேங்கில் தான் வேலை செய்கிறேன் இன்னும் கொஞ்ச நாளில் நிரந்தரமாக வேலை செய்ய போகிறேன் என்று ஆதி சொல்கிறார். உடனே பார்வதி கோவத்தில், இந்த வீட்டு மருமகளா இருந்தாலும் எந்த நல்லதும் நடக்க விடமாட்டாங்க என்று பார்வதி சத்தம் போட, உடனே சிவகாமி நீ செய்வது சரியா என்று பார்வதியை திட்டுகிறார். இது அதுவே வந்த சம்மந்தம் இல்லை நீ தான் வர வைத்த என்று திட்டுகிறார். அன்னைக்கு ரோஜா பூவுடன் நின்றது இந்த பையன் தான் என்று சொல்கிறார்.
அப்போது சரவணனும் சந்தியாவும் மழையில் நனைந்து வர சிவகாமி பார்த்து வர கூடாத என்று கேட்கிறார். பின்னர் இருவரும் உடை மாற்றி வர சந்தியாவிற்கு மழையில் நனைந்தது பிடிக்காமல் சளி பிடித்து விட்டது. அதை பார்த்த சரவணன் அவருக்கு தலை துவட்டி விடுகிறார். அதை சந்தியா நினைத்து சந்தோசப்படுகிறார். பின்னர் வெளியே சென்று சரவணன் அவருக்கு ஜலதோஷம் பிடித்துள்ளது என்று சொல்லி சாம்பிராணி மற்றும் கஷாயம் வாங்கி வருகிறார்.
உள்ளே வந்து சந்தியாவிற்கு சாம்பிராணி காட்டி விடுகிறார். சரவணனின் அன்பை பார்த்து சந்தியா ரசிக்கிறார். பின்னர் கஷாயம் வைத்து கொடுக்க அது கசப்பாக இருக்கு வேண்டாம் என சொல்கிறார். மயில் அங்கே வந்து சந்தியாவிற்கு ஜலதோஷம் பிடித்ததை பார்த்து விடுகிறார். வெளியே சரவணன் அவருக்கு பிடித்துள்ளது என்று சொன்னாரே என கேட்க, எனக்கும் தான் ஜலதோஷம் என்று சொல்கிறார். உடனே சரவணன் இருமல் வந்து காட்ட இது போலி இருமல் என மயில் சொல்கிறார். இப்போ சாம்பிராணி போட்டதும் தான் இருமல் சரியா போச்சு என்று சரவணன் சமாளிக்கிறார். சந்தியா சரவணனின் பாசத்தை பார்த்து சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!