சந்தியாவை காணமால் தவிக்கும் சரவணன், இரவில் கொசுவத்தி வைத்து சிக்கிய பரிதாபம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியா சிவகாமி கூட படுத்ததால் சரவணன் அவருக்கு கொசுவத்தி கொண்டுவந்து வைக்கிறார். சந்தியா சரவணன் தான் வைத்தார் என்பதை கண்டுபிடித்து சந்தோசப்படுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சிவகாமி, சந்தியா, அர்ச்சனா மூன்று பேரும் ஹாலில் படுத்துள்ளனர். சரவணன் ரூமில் சந்தியா ஞாபகத்துடன் இருக்கிறார். சந்தியாவை பார்க்க போக அங்கே அவருக்கு வெக்கையாக இருக்கிறது உடனே ஒரு துண்டை வைத்து வீசி விடுகிறார். பின்னர் சந்தியாவிற்கு கொசு கடிக்க சரவணன் கொசுவத்தி கொண்டுவந்து வைக்கிறார்.
பின்னர் சந்தியா கையில் கொசு கடிக்க அதனை அடிக்கிறார். அப்போது சந்தியா கத்த அர்ச்சனாவை மிதித்துவிட்டு ஓடுகிறார். அர்ச்சனா பெருச்சாளி வந்ததாக கத்துகிறார். சிவகாமி அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்ல, டம்ளர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே திருடன் வந்திருப்பானோ என்று சந்தியாவை பார்க்க அனுப்புகிறார்.
வண்டியில் இருந்து கீழே விழும் பாக்கியா, காலில் எலும்பு முறிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
சந்தியா வந்து அங்கே யாருமில்லை என்று சொல்கிறார். பின்னர் அனைவரும் தூங்க அர்ச்சனா நைட் எல்லாம் தூங்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது கணவர் வந்து நான் போன் செய்து உன்னை வர சொல்கிறேன் என்று சொல்கிறார். சரவணனும் சந்தியாவும் கோவிலுக்கு செல்ல உள்ளதால் அவர்களுக்கு இடையே எந்த சண்டையும் நடக்க கூடாது என சரவணனின் அப்பா சொல்கிறார்.
பின்னர் யார் கொசுவத்தியை வைத்தா என்று மயில் அனைவரிடமும் கேட்க யாருமே வைக்கவில்லை என்று சொல்கின்றனர். சரவணனும் வைக்கவில்லை என்று போய் சொல்கிறார். சந்தியா யார் வைத்திருப்பா என்று குழப்பத்தில் இருக்க சரவணனை தவறுதலாக தலையில் முட்டிவிடுகிறார். அப்போது சரவணனின் கையில் மருதாணி இருக்க, நீங்க தான கொசுவத்தி வைத்தது என்று சந்தியா கண்டுபிடித்து கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.