பார்வதியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும் விக்கி, காப்பாற்ற வரும் சரவணனன் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதியை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று தப்பாக நடக்க முயற்சி செய்கிறார் விக்கி, பின் தொடர்ந்து வந்து பார்வதியை காப்பாத்துகிறார் சந்தியா. அப்போது சரவணன் அங்கே வந்து காப்பாத்துகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், பார்வதி விக்கியை பார்த்து, வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்ததையும், அண்ணிக்கு நம்ம மீது சந்தேகம் வந்ததையும் சொல்லி புலம்புகிறார். சந்தியா பார்வதி மீது உள்ள சந்தேகத்தில் ஆட்டோவில் பின் தொடருகிறார். விக்கி தனது நண்பன் வீடு இருப்பதாக சொல்லி பார்வதியை தனியாக ஒரு வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
பார்வதி வர சம்மதம் தெரிவிக்காமல் இருந்தால் விக்கி இனிமேல் என்னிடம் பேசாதே என்று மிரட்டுகிறார். சந்தியா அதை பின் தொடர்ந்து வந்து பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார், பார்வதி தனியாக இருக்க சந்தியா கதவை மூடுவதை பார்த்து பயத்தில் சரவணனிடம் போன் செய்கிறார். விக்கி பார்வதியை அருகில் அமர வைத்து பேசுகிறார்.
எதற்கு கதவை மூடுகிறாய் என பார்வதி கேட்கிறார். விக்கி குடித்துள்ளதை பார்வதி கண்டுபிடிக்கிறார். பார்வதி உஷாராக நீ செய்வது சரி இல்லை என கத்துகிறார். நீ வீட்டிற்கு போனால் உனக்கு கல்யாணம் செய்து வைத்திருவார்கள். இப்போ தப்பு செய்துவிட்டால் வீட்டில் பேசிக்கொள்ளலாம் என சொல்ல பார்வதி முடியாது என சொல்கிறார்.
பார்வதியை பலவந்தமாக விக்கி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ய, சந்தியா கதவை திறக்க முயற்சி செய்கிறார். உன் கல்யாணத்தை நிறுத்த இதான் வழி என்று விக்கி சொல்கிறார். விக்கி மல்லுக்கட்ட பார்வதி விக்கியை அடித்து விடுகிறார், சந்தியா கதவை திறந்து உள்ளே வர பார்வதி சந்தியா பக்கம் வருகிறார். சந்தியாவை மீறி விக்கி பார்வதியை அழைக்க சந்தியா முடிந்தவரை தடுக்கிறார்.
உடனே அங்கே சரவணன் வர விக்கியை சரமாரியாக அடிக்கிறார். உன் தங்கச்சி சம்மதத்துடன் தான் செய்ததாக விக்கி சொல்கிறார். பார்வதி சரவணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, விக்கியை அடிக்கிறார். பார்வதியையும் உனக்காக சந்தியாவிடம் சண்டை போட்டேன் என திட்டுகிறார். இன்னொரு தடவை என் தங்கச்சியிடம் பிரச்சனை செய்தால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என சரவணன் சொல்லி அவனை அடித்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.
பார்வதி அவனை காதலித்ததாக சொல்லவும், நீ முன்னாடியே எங்ககிட்ட சொல்லிருக்கலாம் என சொல்லி, இங்க நடந்த எல்லாத்தையும் கனவாக நினைத்து மறக்க வேண்டும் என சந்தியா சொல்கிறார். சரவணன் அடித்ததால் அவர் மீது விக்கி கோபத்துடன் இருக்கிறார். மூன்று பேரும் சேர்ந்து வர சிவகாமி கேள்வி கேட்கிறார். இது காலேஜ் முடியும் நேரம் இல்லை என சிவகாமி சந்தேகத்துடன் கேட்கிறார்.
சரவணன் பார்வதியை உள்ளே அனுப்பி சிவகாமியிடம் பொய் சொல்லி சமாளிக்கின்றனர். பார்வதிக்கு வயிற்று வலி அதான் சந்தியா காலேஜ் போய் அவளை கூட்டிட்டு வந்தா என சரவணன் பொய் சொல்லுகிறார். சிவகாமி சரவணனை அழைத்து என்கிட்ட பொய் சொல்லலையே என்று கேட்க சரவணனின் கையில் அடிபட்டுள்ளதை பார்த்து சிவகாமி சந்தேகத்துடன் கேட்கின்றனர். சிவகாமி அப்போதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். முன்னாடி ஊருக்கு போன அன்னைக்கு இப்படி தான் பொய் சொன்ன என சந்தேகப்படுகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகள் நாடு திரும்பினர் – மத்திய அரசு கௌரவிப்பு!
எனக்கு என்னமோ தப்பா இருக்கு என சிவகாமி சந்தேகப்படுகிறார். அவரது கணவர் எவ்வளவோ சமாதானம் செய்ய, நம்பாமல் இருக்கிறார். இவன் பொய் சொல்வது இதுவரை நல்லதுக்காக தான இருக்கு என சிவகாமி கணவர் சமாதானம் சொல்கிறார். விக்கி, சரவணனன் அடித்ததை நினைத்து கோவத்தில் இருக்கிறார். இவளுக்காக எவளோ நாள் நல்லவனா நினைத்தேன் தெரியுமா என்று பேசிக்கொண்டிருக்கிறார். எல்லாம் முடிஞ்சு போச்சு இதோட இதை விட்டுவிடு என விக்கியின் நண்பன் சொல்கிறார். ஆனால் விக்கி பயங்கர கோவத்தில் இருக்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!